Thursday, November 19, 2009

கவிதை

அந்த நாள் வராதோ?

மாண்புமிகுக்களே...!
நேற்று வரை நீங்கள்
அரசனாய் ...
அரிதாரம் பூசிக் கொண்டு.

மறந்தும் கூட
மக்களை (உங்கள் வாரிசுகளை அல்ல )
நினைக்கவில்லை.

திக்கெட்டும் தோரணங்கள் ..
தெருவெல்லாம் பஜனைகள்...
உலகே உங்களுக்கு எனும்
ஒப்பாரிக் கூட்டங்கள்.

இந்தியாவில்
நீங்கள் விட்டு வைத்தது
இமயமலையும் தாஜ் மகாலையும் தான்.

தண்ணீருக்கும் ரேசனுக்கும்
நாங்கள் தவித்திருக்க
உங்களின் வெளி நாட்டுச் சொத்து
விக்டோரியா ராணிக்கும் மேல் !

ஜனநாயகச் சாம்பலை
பூசிக்கொண்டு நீங்கள்
சர்வாதிகாரிகளாய் ...

அரிதாரம்
'ஐந்து ஆண்டுகள்' மட்டுமே
என்பதை மறந்தே போனீர்கள் !

விளைவு ?

நீதி தேவதையின்
வாசலில் நெருக்கியபடி
முன் ஜாமீன் கேட்டு
முதல்வர் முதற்கொண்டு..

உங்களுக்குக் கிடைக்கும்
தண்டனைகள் அடுத்து வரும்
மாஜிக்களுக்குப் பாடமாக

தண்டனைச் சிறையில்
அவமானச் சேற்றில் சிக்கி
உங்களின் அகங்காரமும்
ஆணவமும் அழிந்து படும்
நாள் விரைவில் வராதோ ?.

1 comment:

  1. In need of an electrician? Fret no more! Our technicians provide reliable and professional electricians at your convenience.
    For further detail visit our locate please click here>>
    power inverter repair in trichy
    https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
    https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
    https://www.instagram.com/ourtechnicians/

    ReplyDelete